Posts

Showing posts from November, 2019

Thiruchendurai Chandrasekaran temple, Jeeyapuram திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில், ஜீயபுரம்.

Image
திருச்செந்துறை மானேந்தியவல்லி சமேத சந்திரசேகர சுவாமி திருக்கோயில் ஜீயபுரம் திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். அமைவிடம் திருச்சி-கரூர் சாலையில் முத்தரசநல்லுர், அல்லூர், ஜீயபுரத்தை அடுத்து அமைந்துள்ளது. சாலையோரத்தில் கோயில் உள்ளது. இறைவன்,இறைவி இக்கோயிலில் உள்ள இறைவன் சந்திரசேகரர் ஆவார். இறைவி மானேந்தியவல்லி ஆவார். பிற சன்னதிகள் திருச்சுற்றில் சுப்பிரமணியர், துர்க்கையம்மன் சன்னதிகள் உள்ளன. வலது புறத்தில் இறைவி சன்னதி உள்ளது. தொடர்புக்கு: 8754422764 சரும நோய் தீர்க்கும் சந்திரசேகர சுவாமி கோவில்   சந்திரசேகர சுவாமி கோவிலுக்கு வந்து வணங்குபவர்களுக்கு குழந்தை பாக்கியம், தீராதநோய் தீர்க்கும் வல்லமை, இழந்த செல்வத்தை மீண்டும் பெறும் வாய்ப்பு உள்ளிட்ட கிடைக்கும் என்று புராண நூல்களில் குறிக்கப்பட்டு்ள்ளன. சரும நோய் தீர்க்கும் சந்திரசேகர சுவாமி கோவில் தமிழகத்தின் முதுகெலும்பாக விளங்கும் காவிரி ஆற்றின் தென் பகுதியில் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றாக திகழ்கிறது, திருச்செந்துறை கிராமத்தில் அமைந்துள்ள சந்திரகேரர் ஆலயம். சுமார்

Kumbakonam-the city of temples கும்பகோணம் கோயில் நகரம்

Image
#கும்பகோணம்கோயில்சுற்றுலா29ஆகஸ்ட்2019முதல்03092019வரை# கும்பகோணம்/குடந்தை/குடமூக்கு/கும்மோணம் கும்பகோணம் (Kumbakonam) தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் வட்டம் மற்றும் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், சிறப்பு நிலை நகராட்சி ஆகும்.இந்த சிறப்பு நிலை நகராட்சியில் 45 வார்டுகள் அமைந்துள்ளது. தமிழக சிறப்பு நிலை நகராட்சிகளிலேயே மிகப்பெரிய நகராட்சியும் அதிக வார்டுகளை கொண்ட நகராட்சியும் இதுவே ஆகும். கும்பகோணம் குடந்தை சிறப்பு நிலை நகராட்சி நாடு  இந்தியா மாநிலம் தமிழ்நாடு பகுதி சோழ நாடு மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் மக்கள்தொகை (2011)  • மொத்தம் 1,54,237 மொழிகள்  • ஆட்சிமொழி தமிழ் காவேரி கரையில் அமைந்துள்ள கும்பகோணம், சென்னைக்கு 270 கி.மீ தெற்கிலும், திருச்சிக்கு 90 கி.மீ கிழக்கிலும், தஞ்சாவூருக்கு 40 கி.மீ வட-கிழக்கிலும் உள்ளது. சோழர் காலத்தில் குடந்தை என்று அழைக்கப்பட்டு வந்த கும்பகோணம் ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக விளங்கியதாக கூறப்படுகிறது. கும்பகோணத்தில் அதிக எண்ணிக்கையில் சைவ மற்றும் வைணவக் கோயில்கள் உள்ளன.