Temple info -659 Kottai Mariamman temple, Dindukal கோட்டைமாரியம்மன் கோயில், திண்டுக்கல்
Temple info -659
கோயில் தகவல் -659
Arulmigu Kottai Mariyamman Temple, Dindigul
Vinayagar Shrine
Location
,Tamil Nadu,Dindigul District,India
Open Timings
Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday
:
06:00 am-01:00 pm
Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday
:
04:00 pm-09:00 pm
Pooja Timings
Kalasandhi pooja (KALASANDHI)
Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday
:
08:30 am-08:45 am
Uchikkala Pooja (Uchikalam)
Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday
:
12:00 pm-12:15 pm
Ardhajama Pooja (Ardhajamam)
Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday
:
08:31 pm-08:45 pm
Other Deities
Madurai Veern Sannathi
Sri Muniappa Swamy
Karupanaswamy Sannathi
Murugan Shrines
Bala Vinayagar Shrine
Sthala Puran
Arulmigu Kottai Mariamman Temple is located at Dindigul. Its Tamil Name `Dindukkal` has an interesting story behind it. It is said that the place derived its name from the big `Dhindukkal Stone` (Rock Mount) situated in the centre of the place. During Vedic Period, Dindigul is also called by various names such as Padmagiri, Dhindeerchuram ^^ Nellivanam. During history period, Dindigul was the boundary of the three great reigns - Chera, chola Pandian Kingdom in Silapathikaram one of the Iyumperum Kappiyas,
A strong hold (Kottai) has been built on top of the rock mount of the vedic ^^ historic famous Dindigul. A big parade-ground is situated on the eastern, side of the kottai pond at the bottom of this rock-mount initially a pedestal ^^ then the now-famous sanctum sanctorum (Karuvarai) idol were established by the warriors of Tippu Sultan period. Which they worshipped as their safeguarding goddess.
The Temple is managed by the fifth-generation hereditary Trustees of Dindigul. Unlike other mariamman temples, the goddess is worshipped in “Dhasavathara Alangaram” ^^ in “Anantha Sayanam” Posture in the midst of an artificial pond during the main festival period.
Sun god worships the idol during a particular period of march ^^ October by showing the rays on the head and face of Amman Idol every year. The goddess is worshipped by hindus, muslims and Christians without any religious discrimination. Thousands of pilgrims visit the temple during masi festival.
Social Activities
Annadhan
We are providing Annadhanam daily for 100 Persons and 200 persons on every friday.
How to reach
Nearest Bus Station
Dindigul
Nearest Railway Station
Dindigul
Nearest Airport
Madurai
Contact Details
Phone
+91 451 2427267, 94444 02440.
திண்டுக்கல்
கோட்டை_மாரியம்மன்
தல_சிறப்புகள்
மூலவர் : மாரியம்மன்
புராண பெயர் : திண்டீஸ்வரம்
ஊர்
திண்டுக்கல்
மாவட்டம் : திண்டுக்கல்
மாநிலம் : தமிழ்நாடு
திருவிழா:
திருவிழா தொடங்க முன் அறிவிப்பாக மாசிமாதம் அம்மாவாசை முடிந்த 5-ம் நாள் கொடியேற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து 20 நாள்கள் சிறப்பாக விழா கொண்டாடப்படும். அதிகபட்சமாக ஒரு மாதம் வரை திருவிழா நடைபெறும்
தல_சிறப்பு:
இந்த அம்மன் மற்ற தெய்வங்களை காட்டிலும் சிலையின் அடிப்பகுதி, பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதைந்து இருப்பது சிறப்பாகும்.
திறக்கும்_நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
அருள் மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல் - 624001. திண்டுக்கல் மாவட்டம்.
#போன்:
+91 451 2427267, 94444 02440
#பொது_தகவல்:
சன்னதியின் உள்புறத்தில் நூழைவாயில் கம்பத்தடி அமைந்துள்ளது. தாமிரத்தால் கலந்து செய்யப்பட்டுள்ளது.
அம்மன் சன்னதியை ஒட்டி முன்புறம் தெற்குப்பக்கம் விநாயகர் கோவிலும், வடக்குப்பக்கம் மதுரைவீரன் சாமிகோயில், முன்புற வடக்கில் நவக்கிரங்கள், பின்பக்கம் தென்புறம் முனீஸ்வர சுவாமி சன்னதி, வடபுறம் கருப்பணசாமி சன்னதி உள்ளது.காளியம்மன் சிலை, துர்கை சிலை உள்ளது.
மேலும் விழாக்காலத்தில் சிம்மவாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம், ஆகிய வாகனங்களில் அம்மன் காட்சிதருவார்.
பிரார்த்தனை
இங்கு அம்மனை வேண்டிக்கொண்டால் குழந்தை வரம் கிடைக்கும். அம்மை, உடல் உறுப்புகள் குறைபாடுகள் நீங்குகின்றன. மற்றும் தீராத நோய்களும் குணமாகின்றன.
நேர்த்திக்கடன்:
நோய் நொடிகள் நீங்க மஞ்சளும், உப்பும் கொடி கம்பத்தடியில் இடுகிறார்கள். கொடி ஏற்றும் போது பெண்கள் புனித நீர் அபிஷேகம் நடத்துவர். இதன் மூலம் அம்மனின் கோபம் தணிந்து நாட்டுக்கு நன்மை தருவதாக ஐதீகம். தீச்சட்டி ஏந்திவருவது, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அனுதினமும் வழிபட்டால் குழந்தைபாக்கியம் கிட்டும். அவ்வாறு நன்மை பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் சுமந்தும், மாவிளக்கு ஏற்றி கண்களில் வைத்தும் அம்மனை வழிபடுவது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும். இதுபோன்ற பல்வேறு நேர்த்திகடனை செலுத்துவார்கள். இதுபோன்ற காலத்தில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் அம்மனை வழிபடுவார்கள்.
தலபெருமை:
திண்டுக்கல் மாவட்டம் வாஸ்து சாஸ்திரப்படி அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமாக திண்டுக்கல் உள்ளது. மேற்கு திசையில் மலையும், அதன் மீது கோட்டையும், அமைந்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோட்டை இன்றும் அழியாமல் உள்ளது.
இந்த கோட்டையிலிருந்து பழநிக்கு சுரங்கப்பாதை இருப்பதாகவும், இந்த வழியாக பல முறை திப்புசுல்தான் பழநிக்கு சென்றாகவும் வரலாறு கூறுகிறது. இந்த மலைக்கோட்டையின் அழகான பின்னணியில்தான் இந்த அம்மன் கோயில் இருக்கிறது. இந்த கோட்டையால்தான் அம்மனும் கோட்டை மாரியம்மன் என அழைக்கப்படுகிறாள்.
அம்மன் அமர்ந்த கோலத்தில் இத்தலத்தில் எழிலுற வீற்றிருக்கிறாள்.
8 கைகளுடன் காட்சி தரும் அம்மனின் வலது கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலம், ஆகியவையும், இடது கையில் வில், கிண்ணம், பாம்பு, ஆகியவைகள் காணப்படுகின்றது.
தல வரலாறு
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது. மலைக்கோட்டையின் கீழ் திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர். அதுவே திண்டுக்கல் மக்களுக்கு "கோட்டை மாரியம்மனாகவும்' காவல் தெய்வமாக உள்ளது.
இக்கோயிலுக்குகென்று சிறப்பு வாயில்கள் மூன்று உள்ளது. அம்மன் ஊர்வலக்காலங்களில் வெளியே செல்வது முன்புறமாக செல்லும். பின்புற வாயில்கள் மலைக்கோட்டையை ஒட்டியுள்ளது. ஆண்டுதோறும் மாசிமாதம் 20 நாட்கள் திருவிழா நடைபெறும்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இந்த அம்மன் மற்ற தெய்வங்களை காட்டிலும் சிலையின் அடிப்பகுதி, பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதைந்து இருப்பது சிறப்பாகும்.
கோட்டை_மாரியம்மன்
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது. மலைக்கோட்டையின் கீழ் திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர். அதுவே திண்டுக்கல் மக்களுக்கு "கோட்டை மாரியம்மனாகவும்' காவல் தெய்வாமாக உள்ளது.
மேற்கு திசையில் மலையும், அதன் மீது கோட்டையும், அமைந்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபபட்ட கோட்டை இன்றும் அழியாமல் உள்ளது. இந்த கோட்டையிலிருந்து பழநிக்கு சுரங்கப்பாதை இருப்பதாகவும், இந்த வழியாக பல முறை திப்புசுல்தான் பழநிக்கு சென்றாக வரலாறு கூறுகிறது.
இந்த மலைக்கோட்டையின் அழகான பின்ணனியில்தான் இந்த அம்மன் கோயில் இருக்கிறது.இந்த கோட்டையால்தான் அம்மனும் கோட்டை மாரியம்மன் என அழைக்கப்படுகிறாள்
அம்மன் அமர்ந்த கோலத்தில் இத்தலத்தில் எழிலுற வீற்றிருக்கிறாள்
8 கைகளுடன் காட்சி தரும் அம்மனின் வலது கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலம், ஆகியவையும், இடது கையில் வில், கிண்ணம், பாம்பு, ஆகியவைகள் காணப்படுகின்றது.
இந்த அம்மன் மற்ற தெய்வங்களை காட்டிலும் சிலையின் அடிப்பகுதி, பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதைந்து இருப்பது சிறப்பு,
இக்கோயிலுக்குகென்று சிறப்பு வாயில்கள் மூன்று உள்ளது. அம்மன் ஊர்வலக்காலங்களில் வெளியே செல்வது முன்புறமாக செல்லும். பின்புற வாயிகள் மலைக்கோட்டையை ஒட்டியுள்ளது.
ஆண்டுதோறும் மாசிமாதம் 20 நாட்கள் திருவிழா நடைபெறும்.
சன்னதியின் உள்புறத்தில் நூழைவாயில் கம்பத்தடி அமைந்துள்ளது. தாமிரத்தால் கலந்து செய்யப்பட்டடுள்ளது. அம்மன் சன்னதியை ஒட்டி முன்புறம் தெற்குப்பக்கம விநாயகர் கோவிலும், வடக்குப்பக்கம் மதுரைவீரன் சாமிகோயில், முன்புற வடக்கில் நவக்கிரங்கள், பின்பக்கம் தென்புரம் மூனீஸ்வரசுவாமிசன்னதி, வடபுறம் கருப்பணசாமி சன்னதி உள்ளது.காளியம்மன் சிலை, துர்கை சிலை உள்ளது. மேலும் சிம்மவாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம், ஆகிய வாகனங்கள் விழாக்காலத்தில் அம்மன காட்சிதருவார்.
திருவிழா தொடங்க முன் அறிவிப்பாக மாசிமாதம் அமாவாசை முடிந்த 5ம் நாள் கொடியேற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து 20 நாள்கள் சிறப்பாக விழா கொண்டாடப்படும் அதிகப்பட்சமாக ஒரு மாதம் வரை திருவிழா நடைபெறும்
திண்டுக்கல் நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் கோயிலுக்கு ஆட்டோ அல்லது பேருந்து மூலம் கோயிலுக்கு சென்று வரலாம்
நோய் நொடிகள் நீங்க மஞ்சளும், உப்பும் கொடி கம்பத்தடியில் இடுகிறார்கள்.
கொடி ஏற்றும் போது பெண்கள் புனித நீர் அபிஷேகம் நடத்துவர். இதன் மூலம் அம்மனின் கோபம் தணிந்து நாட்டுக்கு நன்மை தருவதாக ஐதீகம்.
தீச்சட்டி ஏந்திவருவது, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அனுதினமும் வழிபட்டால் குழந்தைபாக்கியம் கிட்டும். அவ்வாறு நன்மை பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் சுமந்தும், மாவிளக்கு ஏற்றி கண்களில் வைத்தும் அம்மனை வழிபடுவது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும். இதுபோன்ற பல்வேறு நேர்த்திகடனை செலுத்துவார்கள்.
நன்றி - நெய்வேலி முரளி
Comments
Post a Comment