Temple info -125 Thiruavinankudi Kuzhandai Murugan temple திரு ஆவினான்குடி குழந்தை முருகன் கோயில்

 Temple info -125

கோயில் தகவல் -125







Thiru Avinankudi Temple, Pazani


For most of us Pazani Murugan is Dandayuthapani temple at the top of the Pazani hill.


Thiru Avinankudi temple is one of the six abodes (Third) of Lord Muruga who is considered as the Lord of Kurinji (mountain).  The temple got its name from the place it is situated whereas the shrine is called as Kulandai Vēlālyudhaswāmi Temple.  It is believed as the earliest abode of Lord Muruga which began under the shade of ‘Nelli’ (Amla) Tree. This temple is about 200 meters from the foothill of main temple. It is one of the temples similar to Chozha architecture.  There are also shrines for Vinagaya, Annamalaiyar, Unnamulai amman, Lord Shani, Dhakshinamoorthy in the temple complex.  Milk is given as neivediyam after Balamurugan Abhisegam.   It is believed that if somebody is yearning for a child they would receive one soon if they worship here.


The presiding deity is Lord Muruga as a child sitting on a peacock.  The shrine is located at an elevation where the full view of the deity can be seen at a glance.  Even the Nelli tree can be noticed beside the Lord clearly.


Renovation of the Temple


The temple was renovated lavishly between 1898 and 1910 by N. M. Subramanian Chettiar of Karaikudi and K.P.S. Palaniappa Chettiar of Kandanur, S.P.    Ramanathan Chettiar and other members of the first donor’s family have added in 1968 a majestic Rāja Gopuram—one of Palani’s landmarks visible from the hill-temple.  Since the late 1970’s, a few small shrines and an artistic Mandapam have been constructed, adding to the beauty of an already beautiful temple.


A Tank Named ‘Saravana Poigai’


There is a holy tank associated with the temple called as ‘Saravana Poigai’.Usually before visiting the main hill temple devotees visit here.  Saravana Poigai is the name of a pool in the Himalayas, from whose waters the divine child, Saravana Poigai Muruga is believed to have emerged.  Saravana Poigai pools in Lord Muruga shrines are sources of redemption.  Accumulated sins are thought to be destroyed by a dip here.  As fire consumes fuel, so too this sacred pool consumes the sins of the wicked.  It is a tradition to bath at the pool before you enter the sanctorum.  There is separate bath taps for both men and women.


Lot of marriages takes at this temple every year. The temple has got a peaceful atmosphere and is well maintained by the temple authorities.


Reaching the Temple


It takes 2 minutes by car to travel from Palani to Tiru Avinankudi Temple.    Approximate driving distance between Palani and Tiru Avinankudi Temple is 2 Kms.


திருவாவினன்குடி (பழனி) தரிசனம். 


 நம்மில் பலர் பழனி முருகன் என்றால் மலைமீதுள்ள தண்டாயுதபாணிதான் என்று நினைக்கிறார்கள்.


குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் என அழைக்கப்படும் திருவாவினன்குடி முருகன் கோயில் அறுபடை வீடுகளில் ஒன்றான இக் கோயில் பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது . 


சங்ககாலப் புலவரான நக்கீரரும், பிற்காலத்தவரான அருணகிரிநாதரும் திருவாவினன்குடி முருகனைக் குறித்துப் பாடல்கள் பாடியுள்ளனர்.


 அகத்தியர் இங்கு தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.


பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது.ஆனால் இவை இரண்டுமே மூன்றாவது அறுபடை வீடாக கருதப்படுகின்றன.


பழனி என்பது மலையின் பெயராகும். பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி ஸ்தலத்தையும் உள்ளிட்ட நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது.


பழனி மலையிலே அமைந்துள்ளது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போக சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன.


இந்த திருத்தலத்தை திரு-என்ற இலக்குமி தேவியும், ஆ-என்ற காமதேனுவும், இனன்-என்ற சூரியனும் குடியிருந்து முருகப்பெருமானை வழிபட்டமையால் “திரு ஆ இனன் குடி” என்று பெயர் பெற்றது.


திரு – இலட்சுமி

ஆ – காமதேனு

இனன் – சூரியன்

கு – பூமாதேவி

டி – அக்கினிதேவன்


இந்த ஐவரும் முருகனை பூசித்தமையால் இந்த ஸ்தலத்திற்கு “திருவாவினன் குடி” என்று ஆயிற்று .


நாரதர் கொடுத்த கனியைத், தனக்குத் தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி இத்தலம் வந்தார். சமாதானம் செய்ய, அம்பிகை பின்தொடர்ந்து வந்தார். சிவப்பரம்பொருளும் அவரைப் பின்தொடர்ந்தார். முருகன் இத்தலத்தில் நின்றார். அம்பிகை, இங்கு மகனை சமாதானம் செய்தார். ஆனாலும் முருகன் விடாப்பிடியாக இங்கேயே இருக்க விரும்புவதாகச் சொல்லி தங்கிவிட்டார். பிற்காலத்தில் இவ்விடத்தில் முருகனுக்குக் கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி குழந்தை வடிவமாக நின்றதால், “குழந்தை வேலாயுதர்’ என்று பெயர் பெற்றார்.பழத்தின் காரணமாக முருகன் கோபித்து வந்தபோது, அவரைக் கண்ட அவ்வையார், “பழம் நீ’ (நீயே ஞானவடிவானவன்) என்று ஆறுதல் வார்த்தைகள் சொன்னார். இப்பெயரே பிற்காலத்தில், “பழநி'’ என மருவியது.


முருகனைப் பிரிந்த துயர் தாளாத சிவபெருமானும், உமாதேவியும், முருகனைப் பின் தொடர்ந்து திருவாவினன் குடிக்கு வந்து “பழம் நீ” என்று முருகனுக்குச் சூட்டிய திருப்பெயரே நாளடைவில் மருவி “பழனி” என்று ஆகிவிட்டது என்றும் பழனி ஸ்தல புராணம் கூறுகிறது.


இந்நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ அமைந்துள்ளது. கடைச்சங்ககாலத்தில் பழனி – பொதினி என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும், பொதினி என்ற பெயரே நாளடைவில் பழனி என்று ஆகிவிட்டதாகவும் சிலர் விளக்கம் தருகிறார்கள் .


திருவாவினன்குடி கோயிலுக்கு அருகில், முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கை தீர்த்தமும், கோயிலில் உள்ள மகாலட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி முதலியவர்களின் சன்னதிகளும், சித்திரங்களும் இவ்வரலாற்றை விளக்குகின்றன.


கயிலையில் முருகப்பெருமானைப் பிரிந்த சிவனும், உமாதேவியும் வருந்தினர். இறைவனைக் குறிக்கும் “சச்சிதானந்தம்” என்ற பெயரில் வருகின்ற “சத்” என்னும் பதம் சிவபெருமானையும், “சித்” என்னும் பதம் பார்வதி தேவியையும், “ஆனந்தம்” என்னும் பதம் முருகப்பெருமானையும் குறிக்கும்.


விநாயகர் தன் அன்னையிடமிருந்து தோன்றியவர். முருகனோ, தந்தையின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர். இருந்தாலும், தாயின் மீது அவருக்கு கொள்ளைப்பாசம். பொதுவாக குழந்தைகள் தாய்க்குப் பிறகே தந்தையிடம் அடைக்கலமாவார்கள்.


இடும்பன் என்பவன் அகத்தியரின் உத்தரவுப்படி தென் பொதிகைக்கு கொண்டு செல்ல சக்திகிரி, சிவகிரி என்ற இருமலைகளை எடுத்து வந்தான். வழியில் இத்தலத்தில் பாரம் தாங்காத இடும்பன் மலைகளை கீழே வைத்து விட்டான். இதில் சக்திகிரி அம்பிகையின் அம்சம், சிவகிரி சிவனின் அம்சம். திருஆவினன்குடியில் இருந்த முருகன், அம்பிகையின் அம்சமான சக்திகிரி மீது ஏறி நின்று கொண்டார். இடும்பன் அவரை இறங்கும்படி சொல்லியும் கேட்கவில்லை. இடும்பன் அவரை எதிர்க்கத் துணிந்தான். அவனுக்கு தன் அருட்பார்வையை செலுத்தி, தன்னுடன் வைத்துக் கொண்டார் முருகன்.


மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்ததால், “தண்டாயுதபாணி’ என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இங்கு வந்த போகர் சித்தர், முருகனுக்கு நவபாஷாணத்தால்ஒரு சிலை வடித்தார். இந்த மூர்த்தியே மலைக்கோயிலில் மூலவரா காட்சி தருகிறார். காலப்போக்கில் இவரே பிரபலமாகிவிட்டார்.


”தண்டம்’ என்றால் “கோல்’ அல்லது “அபராதம்’ என்ற இருவகைப் பொருள்களைக் கொண்டது. “இவ்வுலக வாழ்வு நிலையற்றது’ என்னும் ஞானபாடத்தை கற்பிக்கும் ஆசிரியராக முருகன் இத்தலத்தில் அருளுகிறார். ஆசிரியரின் கையில் கோல் இருக்கிறது. அதைக் கொண்டு பயமுறுத்தி, மாணவர்களை ஒழுக்க வழிக்கு திருப்புவார். முருகன் என்ற ஞான ஆசிரியனும், தன் கையிலுள்ள கோலால், உலக இன்பங்களான மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மாயைகளில் மூழ்கித் தவிக்கும் மக்களை ஆசைகளைத் துறந்து, தன்னைப் போல் ஆண்டிகோலத்திற்கு அழைக்கிறார். மறுப்பவர்களுக்கு “சோதனைகள்’ என்னும் அபராதம் விதிக்கிறார். அச்சோதனைகளை தாங்க முடியாதவர்கள், அவரது வழிக்கே சென்று விடுகின்றனர்.


மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி தலமே “மூன்றாம் படை வீடு’ ஆகும். இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. இவர் சிவனின் அம்சம் என்பதால் இவரது கருவறை சுற்றுச்சுவரில் (கோஷ்டம்) தெட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர்.


இன்றியமையாத தரிசனக் குறிப்பு 


பழநிக்குச் செல்பவர்கள் முதலில் இங்கிருந்து 4 கி.மீ., துõரத்திலுள்ள பெரியாவுடையாரைத் தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோயிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.


  அருணகிரியார் இவரை வணங்கி, திருப்புகழ் பாடவே முருகன் காட்சி தந்ததோடு, ஜபமாலையும் கொடுத்தார். இதனை அருணகிரியார் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். 


 பழநியில் முருகப்பெருமானை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். பெரியநாயகி கோயிலில் மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்திலும், திருஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவிலும், மலைக்கோயிலில் கையில் தண்டத்துடனும் காட்சி தருகிறார். ஒரே தலத்தில் இவ்வாறு முருகனின் மூன்று கோலங்களையும் தரிசிப்பது அபூர்வம்.


சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்று, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால், பழநி தலத்தில் வித்தியாசமாக முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மலைக்கோயிலில் அருளும் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இரண்டு நாட்களில் பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோயிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோயிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.


தைப்பூசத்திருவிழா, பழநி தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சிவப்பரம்பொருள்  தனித்து நடராஜராக நாட்டியமாடிய திருநாள் மார்கழி திருவாதிரை. அந்த நடனத்தை உமாதேவியான சிவகாமி அருகில் இருந்து இரசித்துக் கொண்டிருப்பார். அதே போல ஆனந்த தாண்டவமாட உமாதேவிக்கும் ஆசை ஏற்பட்டது. அந்நடனத்தைக் காண திருமால், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் வந்தனர். அம்பிகை நடனக்காட்சி அருளிய நாளே தைப்பூச நாளாகும். இவ்வகையில், தைப்பூசம் அம்பிகைக்குரிய நாளாகிறது. ஆனால், முருகத்தலமான பழநியில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.


இவ்வூரில் பெரியநாயகி அம்பிகை கைலாசநாதருடன் தனிக்கோயிலில் அருளுகிறார். இங்கு சிவப்பரம்பொருள், அம்பாள் சன்னதியின் நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. பிரதான வாசலும், கொடிமரமும் முருகன் சன்னதி எதிரிலேயே அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைபவர்கள் முதலில் முருகனையே வழிபட்டனர். காலப்போக்கில், முருகன் சன்னதி எதிரிலேயே தைப்பூச விழாவிற்காக கொடி ஏற்றப்பட்டது. தகப்பனை வழிபட வந்தவர்கள், தகப்பன் சுவாமியான முருகனை வழிபட்டனர். இத்தலமும் முருகனோடு தொடர்புடையதாக அமையவே, காலப்போக்கில் முருகனுக்கே தைப்பூச விழா கொண்டாடும் முறை அமைந்துவிட்டது.


தற்போதும் தைப்பூச திருவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. விழாவின்போது, இங்குள்ள உற்சவர் முத்துக்குமாரசுவாமி தினமும் எழுந்தருளுவார். இவ்விழாவின் ஏழாம் நாளன்று இக்கோயிலில் இருந்தே தேர் புறப்பட்டு, வீதியுலா செல்கிறது.


 

திருவாவினன்குடி ஆலயம் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் இருக்கிறது. இவ்வாலயத்தின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை காணப்படுகிறது. முருகனைத் தரிசனம் செய்ய வருபவர்கள் இப்பொய்கையில் நீராடிச் செல்வர்.


இப்பொய்கையின் அருகிலிருந்துதான் காவடி எடுக்கப்போகும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளைக் கொண்டு செல்வர். திருவாவினன்குடி கோயிலில் முருகப்பெருமான் மயில் மீதமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாகக் காட்சி தந்தருள்கின்றார்.


இங்குள்ள முருகப்பெருமானைத் தரிசிக்கும் பொருட்டு, மகாவிஷ்ணு, சிவபெருமான், இந்திரன் முதலியோர் வந்து இங்கே கூடியதாகவும் நக்கீரர் கூறுகிறார்.


இப்பெருமானை வழிபட்ட பின்பே மலைக்கோயிலுக்கு செல்வது மரபு. இத்திருத்தலம் முன்பு நெல்லிவனமாக இருந்தது என்பதற்கு ஓர் ஆதாரம் உண்டு. என்னவெனில், இங்கு தல விருட்சம் நெல்லி மரமாகும்.


இப்படை வீட்டில் முருகப்பெருமான் அபிஷேகப் பிரியராக சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்ற திருத்தலங்களைப் போலல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாத்தப்படுவதில்லை.


அதிகாலை முதல் இரவுப் பூஜை முடியும்வரை சதா பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்தவண்ணமே இருக்கின்றன. அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன.

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 12.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனதான தந்தனத் ...... தனதான
     தனதான தந்தனத் ...... தனதான

அபகார நிந்தை பட்டுழலாதே
     அறியாத வஞ்சரைக் குறியாதே

உபதேச மந்திரப் பொருளாலே
     உனைநான் நினைந்தருள் பெறுவேனோ

இபமா முகன் தனக்கிளையோனே
     இமவான் மடந்தை உத்தமி பாலா

ஜெபமாலை தந்த சற்குருநாதா
     திருஆவினன் குடிப் பெருமாளே

திருப்பாடல் 2:
தனனா தனந்தனத் தனனா தனந்தனத்
     தனனா தனந்தனத் ...... தனதான

கனமாய் எழுந்து வெற்பெனவே உயர்ந்து!கற்
     புர மாரணம் துளுத்திடுமானார்

கனிவாய் உகந்து சிக்கெனவே அணைந்துகைப்
     பொருளே இழந்து விட்டயர்வாயே

மனமே தளர்ந்து விக்கலுமே எழுந்து!மட்
     டறவே உலந்து சுக்கதுபோலே

வசமே அழிந்து உக்கிடுநோய் துறந்து!வைப்
     பெனவே நினைந்துனைப் ...... புகழ்வேனோ

புனவேடர் தந்தபொற் குறமாது இன்புறப்
     புணர்காதல் கொண்ட அக்கிழவோனே

புனலேழும் மங்க வெற்பொடுசூர் சிரங்கள்!பொட்
     டெழ வேலெறிந்த உக்கிரவீரா

தினமேவு குங்குமப் புயவாச கிண்கிணிச்
     சிறுகீத செம்பதத்தருளாளா

சிவலோக சங்கரிக்கிறை பால பைங்கயத்
     திருஆவினன்குடிப் ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தான தந்ததனத் தான தந்ததனத்
     தான தந்ததனத் ...... தனதான

காரணிந்த வரைப் பாரடர்ந்து வினைக்
     காதல் நெஞ்சயரத் ...... தடுமாறிக்

கால் நரம்புதிரத் தோல்வழும்புறு பொய்க்
     காயமொன்று பொறுத்தடியேனும்

தாரிணங்கு குழல்  கூரணிந்த விழிச்
     சாபமொன்று நுதற் ...... கொடியார்தம்

தாள்பணிந்தவர்பொற் தோள் விரும்பிமிகத்
     தாழ்வடைந்துலையத் ...... தகுமோதான்

சூரனங்கம் விழத் தேவர் நின்றுதொழத்
     தோயமும் சுவறப் ...... பொரும்வேலா

தூய்மை கொண்டகுறத் தோகை நின்றபுனச்
     சூழ்பெரும் கிரியில் ...... திரிவோனே

ஆரணன் கருடக் கேதனன் தொழ!முற்
     றாலம் உண்டவருக்குரியோனே

ஆலையும் பழனச் சோலையும் புடை!சுற்
     றாவினன் குடியில் ...... பெருமாளே.

திருப்பாடல் 4:
தான தந்தன தத்தன தத்தம்
     தான தந்தன தத்தன தத்தம்
          தான தந்தன தத்தன தத்தம் ...... தனதான

கோல குங்கும கற்புரம் !எட்டொன்
     றான சந்தன வித்துருமத்தின்
          கோவை செண்பக தட்பமகிழ்ச் செங் ...... கழுநீரின்

கோதை சங்கிலி உற்றகழுத்தும்
     பூஷணம்பல ஒப்பனை மெச்சும் 
          கூறு கொண்ட பணைத்தனம் விற்கும் ...... பொதுமாதர்

பாலுடன்கனி சர்க்கரை சுத்தந் 
     தேனெனும்படி மெத்த ருசிக்கும்
          பாதகம்பகர் சொற்களில் இட்டம் ...... பயிலாமே

பாத பங்கயம் உற்றிட உள்!கொண்
     டோதுகின்ற திருப்புகழ் நித்தம்
          பாடும் அன்பது செய்ப்பதியில் தந்தவனீயே

தால முன்பு படைத்த ப்ரபுச்!சந்
     தேகமின்றி மதிக்க அதிர்க்கும் 
          சாகரம் சுவறக் கிரியெட்டும் ...... தலைசாயச்

சாடு குன்றது பொட்டெழ மற்றும் 
     சூரனும் பொடி பட்டிட யுத்தம் 
          சாதகம் செய் திருக்கை விதிர்க்கும் ...... தனிவேலா

ஆலமுண்ட கழுத்தினில் அக்கும் 
     தேவரென்பு நிரைத்தெரியில் !சென்
          றாடுகின்ற தகப்பன்உகக்கும் ...... குருநாதா

ஆடகம்புனை பொற்குடம் வைக்கும் 
     கோபுரங்களின் உச்சிஉடுத் !தங்
          காவினன்குடி வெற்பினில் நிற்கும் ...... பெருமாளே.

திருப்பாடல் 5:
தனனா தனந்ததன தனனா தனந்ததன
     தனனா தனந்ததன ...... தனதான

சிவனார் மனம்குளிர உபதேச மந்த்ரமிரு
     செவிமீதிலும் பகர்செய் ...... குருநாதா

சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
     செயலே விரும்பிஉளம் ...... நினையாமல்

அவமாயை கொண்டுலகில் விருதாஅலைந்துழலும் 
     அடியேனை அஞ்சலென ...... வரவேணும்

அறிவாகமும் பெருக இடரானதும் தொலைய
     அருள்ஞான இன்பமது ...... புரிவாயே

நவநீதமும் திருடி உரலோடெ ஒன்றும்அரி
     ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே

நவலோகமும் கைதொழு நிசதேவலங்கிருத
     நலமான விஞ்சைகரு ...... விளைகோவே

தெவயானை அங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
     திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா

திருஆவினன்குடியில் வருவேள் சவுந்தரிக
     செகமேல் மெய்கண்ட விறல் ...... பெருமாளே.

திருப்பாடல் 6:
தான தந்தன தானா தனாதன
     தான தந்தன தானா தனாதன
          தான தந்தன தானா தனாதன ...... தனதான

நாத விந்து கலாதீ நமோநம
     வேத மந்த்ர சொரூபா நமோநம
          ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி

நாம சம்பு குமாரா நமோநம
     போக அந்தரி பாலா நமோநம
          நாக பந்த மயூரா நமோநம ...... பரசூரர்

சேத தண்ட விநோதா நமோநம
     கீத கிண்கிணி பாதா நமோநம
          தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோநம
          தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்

ஈதலும்பல கோலால பூஜையும்
     ஓதலும் குண ஆசார நீதியும்
          ஈரமும் குரு சீர்பாத சேவையும் ...... மறவாத

ஏழ்தலம்புகழ் காவேரியால் விளை
     சோழ மண்டல மீதே மநோகர
          ராஜ கெம்பிர நாடாளு நாயக ...... வயலூரா

ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
     சேர்தல் கொண்டவரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதேறி மாகயிலையிலேகி

ஆதி அந்தஉலாஆசுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் ...... பெருமாளே.

திருப்பாடல் 7:
தனனத்தன தான தந்தன தனனத்தன தான தந்தன
     தனனத்தன தான தந்தன ...... தனதான

பகர்தற்கரிதான செந்தமிழ் இசையிற்சில பாடல்அன்பொடு
     பயிலப்பல காவியங்களை ......உணராதே

பவளத்தினை வீழியின்கனி அதனைப்பொரு வாய் மடந்தையர்
     பசலைத்தனமே பெறும்படி ...... விரகாலே

சகரக்கடல் சூழும்அம்புவி மிசைஇப்படியே திரிந்துழல்
     சருகொத்துளமே அயர்ந்துடல் ...... மெலியாமுன்

தகதித்திமி தாகிணங்கிண எனவுற்றெழு தோகை அம்பரி
     தனில்அற்புதமாக வந்தருள் ...... புரிவாயே

நுகர்வித்தகமாகும் என்றுமை மொழியிற்பொழி பாலையுண்டிடு
     நுவல்மெய்ப்புள பாலன் என்றிடும் இளையோனே

நுதிவைத்த கரா மலைந்திடு களிறுக்கருளே புரிந்திட
     நொடியிற் பரிவாக வந்தவன் ...... மருகோனே

அகரப்பொருளாதி ஒன்றிடு முதல்அக்கரமானதின் பொருள்
     அரனுக்கினிதா மொழிந்திடு ...... குருநாதா

அமரர்க்கிறையே வணங்கிய பழநித் திருஆவினன்குடி
     அதனில் குடியாய் இருந்தருள் ...... பெருமாளே.

திருப்பாடல் 8:
தான தந்தன தானா தனாதன
     தான தந்தன தானா தனாதன
          தான தந்தன தானா தனாதன ...... தனதான

போதகம் தரு கோவே நமோநம
     நீதி தங்கிய தேவா நமோநம
          பூதலம்தனை ஆள்வாய் நமோநம ...... பணியாவும்

பூணுகின்ற பிரானே நமோநம
     வேடர் தம்கொடி மாலா நமோநம
          போதவன்புகழ் சாமீ நமோநம ...... அரிதான

வேத மந்திர ரூபா நமோநம
     ஞான பண்டித நாதா நமோநம
          வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான

மேனி தங்கிய வேளே நமோநம
     வான பைந்தொடி வாழ்வே நமோநம
          வீறு கொண்ட விசாகா நமோநம ...... அருள்தாராய்

பாதகம் செறி சூராதிமாளவே 
     கூர்மை கொண்டயிலாலே பொராடியே 
          பார அண்டர்கள் வானாடு சேர்தர ...... அருள்வோனே

பாதி சந்திரனே சூடும்வேணியர்
     சூல சங்கரனார் கீதநாயகர்
          பார திண்புயமே சேரும் சோதியர் ...... கயிலாயர்

ஆதி சங்கரனார் பாக மாதுமை
     கோல அம்பிகை மாதா மநோமணி
          ஆயி சுந்தரி தாயான நாரணி ...... அபிராமி

ஆவல் கொண்டு விறாலே சிராடவே 
     கோமளம்பல சூழ்கோயில் மீறிய
          ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் ...... பெருமாளே.

திருப்பாடல் 9:
தான தந்தன தான தந்தன
     தான தந்தன தான தந்தன
          தான தந்தன தான தந்தன ...... தனதான

மூல மந்திரம் ஓதல்இங்கிலை
     ஈவதிங்கிலை நேயம் இங்கிலை
          மோனம் இங்கிலை ஞானம் இங்கிலை ...... மடவார்கள்

மோகம் உண்டதிதாகம் !உண்டப
     சாரம் உண்டபராதம் !உண்டிடு
          மூகன் என்றொரு பேரும் உண்டருள் ...... பயிலாத

கோலமும் குண வீன துன்பர்கள்
     வார்மையும் பலவாகி வெந்தெழு
          கோர கும்பியிலே விழுந்திட ...... நினைவாகிக்

கூடு கொண்டுழல்வேனை அன்பொடு
     ஞான நெஞ்சினர் பால்இணங்கிடு
          கூர்மை தந்தினியாள வந்தருள் ...... புரிவாயே

பீலி வெந்துயராலி !வெந்தவ
     சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
          பீதி கொண்டிட வாது கொண்டருள் எழுதேடு

பேணி அங்கெதிர் ஆறு சென்றிட
     மாறனும்பிணி தீர வஞ்சகர்
          பீறு வெங்கழுவேற வென்றிடும் ...... முருகோனே

ஆலம் உண்டவர் சோதி அங்கணர்
     பாகமொன்றிய வாலை அந்தரி
          ஆதி அந்தமுமான சங்கரி ...... குமரேசா

ஆரணம்பயில் ஞான புங்கவ
     சேவலங் கொடியான பைங்கர
          ஆவினன்குடி வாழ்வு கொண்டருள் ...... பெருமாளே

திருப்பாடல் 10:
தந்தன தந்தன தான தந்தன
     தந்தன தந்தன தான தந்தன
          தந்தன தந்தன தான தந்தன ...... தனதான

வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள்
     வந்தவர் தங்களை வாதை கண்டவர்
          வங்கணமும் தெரியாமல் அன்புகள் ...... பலபேசி

மஞ்சம் இருந்தநுராக விந்தைகள்
     தந்த கடம்பிகள் ஊறலுண்டிடு
          மண்டைகள் கண்டிதமாய் மொழிந்திடும் உரையாலே

சஞ்சலமும்தரு மோக லண்டிகள்
     இன்சொல் புரிந்துருகாத தொண்டிகள்
          சங்கமம் என்பதையே புரிந்தவன் அயராதே

தங்களில் நெஞ்சகமே மகிழ்ந்தவர்
     கொஞ்சி நடம்பயில் வேசை முண்டைகள்
          தந்த சுகம் தனையே உகந்துடல் ...... மெலிவேனோ

கஞ்சன் விடும் சகடாசுரன்பட
     வென்று குருந்தினிலேறி மங்கையர்
          கண்கள் சிவந்திடவே கலந்தரு ...... முறையாலே

கண்டு மகிழ்ந்தழகாய் இருந்திசை
     கொண்டு விளங்கிய நாளில் அன்பொடு
          கண்குளிரும் திருமால் மகிழ்ந்தருள் ...... மருகோனே

குஞ்சர வஞ்சியும் மான் மடந்தையும் 
     இன்ப மிகுந்திடவே அணைந்தருள்
          குன்றென வந்தருள் நீப முந்திய ...... மணிமார்பா

கொந்தவிழும் தடமே நிரம்பிய
     பண்பு தரும் திருஆவினன்குடி
          குன்றுகள் எங்கினுமே வளர்ந்தருள் ...... பெருமாளே.

திருப்பாடல் 11:
தான தந்தன தானான தாதன
     தான தந்தன தானான தாதன
          தான தந்தன தானான தாதன ...... தனதான

வாரணம்தனை நேரான மாமுலை
     மீதணிந்திடு பூணாரம் ஆரொளி
          வாலசந்திரன் நேராக மாமுகம் எழில்கூர

வாரணங்கிடு சேலான நீள்விழி
     ஓலை தங்கிய வார் காது வாவிட
          வான இன்சுதை மேலான வாயிதழ் அமுதூறத்

தோரணம்செறி தார்வாழை ஏய்தொடை
     மீதில் நின்றிடை நூல்போல் உலாவியெ 
          தோகை என்றிட வாகாக ஊரன ...... நடைமானார்

தோதகம் தனை மாமாயையே!வடி
     வாக நின்றதெனா ஆய ஓர்வது
          தோணிடும்படி நாயேனுள் நீயருள் ...... தருவாயே

காரணம்தனை ஓரா நிசாசரர்
     தாமடங்கலும் ஈறாக வானவர்
          காவல் இந்திர நாடாளவே அயில் ...... விடும்வீரா

கார்விடம்தனை ஊணாக வானவர்
     வாழ்தரும்படி மேல் நாளிலே மிசை
          காள கண்ட மகாதேவனார் தரு ...... முருகோனே

ஆரணன்தனை வாதாடி ஓருரை
     ஓதுகின்றென வாராதெனா அவன் 
          ஆணவம் கெடவே காவலாம் அதில் இடும்வேலா

ஆதவன் கதிர் ஓவாதுலாவிய
     கோபுரம் கிளர் மாமாது மேவிய
          ஆவினன்குடியோனே சுராதிபர் ...... பெருமாளே.

திருப்பாடல் 12:
தான தந்தன தான தந்தன
     தான தந்தன தான தந்தன
          தான தந்தன தான தந்தன ...... தனதான

வேயிசைந்தெழு தோள்கள் தங்கிய
     மாதர் கொங்கையிலே முயங்கிட
          வீணிலும் சில பாதகம் செய ...... அவமேதான்

வீறு கொண்டுடனே !வருந்தியு 
     மே உலைந்தவமே !திரிந்துள
          மே கவன்றறிவே கலங்கிட ...... வெகுதூரம்

போயலைந்துழலாகி நொந்துபின்
     வாடி நைந்தெனதாவி வெம்பியே 
          பூதலம் தனிலே மயங்கிய ...... மதிபோகப்

போது கங்கையின் நீர்சொரிந்திரு
     பாத பங்கயமே வணங்கியே 
          பூசையும் சிலவே புரிந்திட ...... அருள்வாயே

தீயிசைந்தெழவே இலங்கையில்
     ராவணன் சிரமே அரிந்தவர்
          சேனையும் செல மாள வென்றவன் ...... மருகோனே

தேசமெங்கணுமே புரந்திடு
     சூர் மடிந்திட வேலின் வென்றவ
          தேவர் தம்பதியாள அன்பு செய்திடுவோனே

ஆயி சுந்தரி நீலி பிங்கலை
     போக அந்தரி சூலி குண்டலி
          ஆதி அம்பிகை வேத தந்திரி ...... இடமாகும்

ஆலமுண்டரனார் இறைஞ்சவொர்
     போதகம் தனையே உகந்தருள்
          ஆவினன்குடி மீதிலங்கிய ...... பெருமாளே.

Comments

Popular posts from this blog

Temple info -1646. Pidari chelliamman Temple, Velachery, Chennai. பிடாரி செல்லி அம்மன் கோயில், வேளச்சேரி, சென்னை

Temple info -1012 Val vill ramar temple,Thirupullabhoothangud வல்வில் ராமர் கோயில், திருப்புள்ளபூதங்குடி. Divya Desam No.10

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்